search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை உயர்வு"

    • பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.
    • கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், பெரு ந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், கோபிசெட்டிபாளையம் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2010-11ம் ஆண்டுகளில் தங்கம் விலைக்கு இணையாக மஞ்சள் குவிண்டால் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. இதே நிலை சில ஆண்டுகள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை, பல மாநிலங்களில் போதிய மழை இன்மை போன்ற காரணங்களால் மஞ்சள் உற்பத்தி குறைந்து ஈரோடு மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    அதன்பின் கடந்த 6 மாதங்களாக குவிண்டால் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை ஆகி வந்தது. கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மீண்டும் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36-க்கு விற்பனையானதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 678 முதல் ரூ.16 ஆயிரத்து 36 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 599 முதல் ரூ.13 ஆயிரத்து 800 வரையும் விற்பனையானது.

    இங்கு கொண்டுவரப்பட்ட 3 ஆயிரத்து 387 மஞ்சள் மூட்டைகளில் 1,938 மூட்டைகள் ஏலம் போன தாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.13 ஆயிரத்து 799 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.11 ஆயிரத்து 133 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 545 முதல் ரூ.15 ஆயிரத்து 89 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயி ரத்து 889 முதல் 13 ஆயிரத்து 739 வரையும் விற்பனையானது. இதைப்போல் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 12 ஆயிரத்து 633 முதல் 15 ஆயிரத்து 499 வரையும், கிழ ங்கு மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 556 முதல் ரூ.13 ஆயிரத்து 519 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-தற்போது கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது. இதற்கு தரத்தின் அடிப்படையில் சற்று விலை அதிகமாக கிடைக்கிறது.

    பழைய மஞ்சள் இருப்பில் இருந்தவை ரூ.9 ஆயிரத்துக்கு விலை போகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் புதிய மஞ்சள் அறுவடையாகவில்லை. சில மஞ்சள் புதிய ரகம் பெரு வட்டாக வரத்தாகி ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயி ரத்து 36 வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐஸ்கிரீம் உள்பட பால் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    கோடை காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களுக்கு வழக்கத்தை விட தேவை அதிகரிக்கும்.

    தற்போது கோடை காலம் உச்சத்தை எட்ட தொடங்கி இருக்கிறது. அடுத்த வாரம் முதல் வெயில் அளவு கடுமையாக உயரும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் ஐஸ்கிரீம் விற்பனை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில் 4 வகையான ஐஸ்கிரீம் விலையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோ பார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25ஆக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

    100 எம்.எல். எடை கொண்ட கிளாஸ்சிக் கோன் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது போல கிளாஸ்சிக் கோன் சாக்லெட் ஐஸ்கிரீமும் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.

    ஐஸ்கிரீம் விலை உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பால் உபபொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவும், பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் கடந்தாண்டு வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் நாளை (3-ந் தேதி) முதல் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    ஏனெனில் தனியார் பால் நிறுவனங்கள் பலவும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலையை குறைப்பது, பல்வேறு சலுகைகள் வழங்குவது என செயல்பட்டு வரும் சூழலில் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் ஈட்டி, தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதில் அக்கறை காட்டும் ஊழல் அதிகாரிகளால் ஆவின் நிர்வாகம் சிதிலமடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விற்பனை விலை உயர்வு அறிவிப்புகள் ஆவினுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

    அத்துடன் பால் வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகள் மட்டத்தில் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் மக்களின் வரிப்பணத்தை, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் வரும் வருமானத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது.
    • டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

    திருச்சி:

    காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் டெல்டாவில் நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    திருச்சி மொத்த மார்க்கெட்டில் 26 கிலோ எடை கொண்ட மணச்சநல்லூர் பொன்னி அரிசி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ. 1290க்கு விற்கப்பட்டது. இன்றைக்கு அதன் விலை ரூ. 1500 ஆக உயர்ந்துள்ளது.

    சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது. அதேபோன்று அட்சயா பொன்னியின் விலை ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று இட்லி அரிசி உள்பட அனைத்து வகையான அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது.

    திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக திருச்சியில் மணச்சநல்லூர் பொன்னி ரூ. 1500 க்கு கிடைக்கிறது. இதுவே சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் ரூ.1600 முதல், ரூ. 1700 வரை விற்கப்படுகிறது.

    இந்த விலை ஏற்றத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை ஏற்றத்திற்கு டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

    இது தொடர்பாக திருச்சி உறையூர் கற்பகம் அரிசி மண்டி உரிமையாளர் குணசேகரன் கூறும்போது, திருச்சியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு முன்பெல்லாம் பெங்களூரில் இருந்து அதிக அளவு நெல் வரும்.

    தற்போது இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கிருந்து வரும் நெல் வரத்து சரிந்துவிட்டது. காவிரி டெல்டாவிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி உற்பத்தி குறைந்து விலை உயர்ந்து விட்டது என்றார்.

    மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறும் போது, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படும்.

    காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடி 10 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

    அதிலும் திருச்சி, கரூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 5 சதவீதம் கூட சம்பா சாகுபடி செய்யப்படவில்லை. 1890க்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் காவிரியில் 50,000 ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடி செய்யப்பட்டது.

    அதன் பின்னர் 1924 களில் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிரிடப்பட்டது.

    ஆனால் இன்றைக்கு கர்நாடகா காவிரியின் குறுக்கே 5 அணைகள், 30 ஆயிரம் ஏரிகள் அமைத்ததால் 30 லட்சம் ஏக்கரில் அங்கு சம்பா பயிரிட்டுள்ளார்கள். காவிரி டெல்டாவில் முன்பெல்லாம் முப்போக சாகுபடி இருக்கும்.

    இப்போது ஒரு போகத்திற்கு விவசாயிகள் தள்ளாடுகின்றனர். ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் சம்பா சாகுபடியும் சுருங்கிவிட்டதால் அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்.

    இதற்கிடையே அரிசி ஆலை அதிபர் ஒருவர் கூறுகையில், நடப்பு ஆண்டில் அதிகளவு சாப்பாட்டு அரிசியான சன்ன ரக நெல்களை அரிசி உற்பத்தி ஆலைகள் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.

    இதனால் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் சரிந்துள்ளது.

    இந்த கால கட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அரசின் கையிருப்பில் பல லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இப்போது 50 ஆயிரம் டன் நெல் இருப்பு இருக்குமா என்பது கூட சந்தேகமாக உள்ளது. ஆகவே வருங்காலத்தில் ரேசன் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விலை குறைவாக இருக்கும் காரணத்தினாலும், நிபந்தனைகளில் தளர்வுகள் கொண்டு வந்த காரணத்தாலும் தனியார் அரிசி ஆலை அதிபர்கள் நெல்லை பதுக்கி உள்ளனர். ஆகவே வருங்காலங்களில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

    • அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆனாலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 முதல் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூண்டு பதுக்கப்பட்டுள்ளதா? இதனால் விலை உயர்ந்துள்ளதா? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்தும் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி ஒருவர் கூறுகையில், வட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பூண்டு பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. இதனால் பூண்டு விளைச்சல் 4-ல் ஒரு மடங்காக குறைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்கெட்களுக்கு பூண்டு வரத்து தற்போது வரை அதிகரிக்கவில்லை.

    சென்னை கோயம்போடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு தற்போது 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதே போல சேலம் மார்க்கெட்டுகளுக்கும் 4-ல் ஒரு பங்காக பூண்டு வரத்து குறைந்துள்ளது. தற்போது பூண்டு அறுவடை காலம் தொடங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலை குறையும். பூண்டுகளை பதுக்கினால் அழுகிவிடும், இதனால் பதுக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது.
    • சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, பூ மார்க்கெட்டுக்கு நிலக் கோட்டை, அருப்புக் கோட்டை, உசிலம்பட்டி, ஈரோடு, ஓசூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    இப்போது பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

    இந்நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாள் என்பதால் நேற்று அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    இதனால் பூ விற்பனைகளை கட்டியது. வரத்து குறைந்து இருந்த நிலையில் தேவை அதிகரித்ததால் மல்லி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் திடீரென உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மல்லி ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ மல்லி ரூ.1500வரை விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள பூ கடைகளில் மல்லி விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் எகிறியது. கனகாம்பரம் ரூ.700-க்கு விற்பனை ஆனது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமந்தி ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.150முதல் ரூ.200வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை (கிலோவில்) வருமாறு:-

    சம்பங்கி-ரூ.100, அரளி-ரூ.150, ஜாதி-ரூ.800 சாமந்தி-ரூ.150, பன்னீர் ரோஜா-ரூ.100, சாக்லேட் ரோஜா-ரூ.120.

    • 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இன்று 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.

    ஊட்டி கேரட், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைவால் அதன் விலை அதிகரித்து உள்ளது. கேரட் கிலோ ரூ.90-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ், அவரைக்காய் மற்றும் பன்னீர் பாகற்காய் ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது. தக்காளி ரூ40-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கும், முருங்கைக்காய் மற்றும் இஞ்சி கிலோ ரூ.120 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.

    • வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது.

    நாகர்கோவில்:

    தமிழ்நாட்டில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாலும், அளவில் சற்று பெரியது என்பதாலும் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புவார்கள்.

    இதுபோக, தமிழகத்தின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. உற்பத்தி குறைந்த தால், அதன் விலையும் கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து, ரூ.350 வரை விற்பனை செய்யப் பட்டது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை மேலும் அதிக ரித்துள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது சிறிய பூண்டு கிலோ ரூ.250-க்கும், நடுத்தர பூண்டு கிலோ ரூ.350-க்கும், பெரிய பூண்டு கிலோ ரூ.420-க்கும் விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே சமயம் நாகர்கோவிலில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது என்றும், அதன்பிறகு புதுப்பூண்டு வெளி மாநிலங்களில் இருந்து வர தொடங்கியதும் அதன் விலை குறையதட தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல சீரகம் ரூ.480, மல்லி-ரூ.99, மிளகு ரூ.660, கடலை பருப்பு ரூ.72 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காய்கறி வரத்து சீராக இருப்பதால் காய்கறிகள் விலை கூடவோ குறையவோ இல்லை.

    • மருத்துவ குணம் கொண்ட பூண்டு இல்லாமல் ரசம் உள்பட எந்தவொரு சமையலும் செய்ய முடியாது.
    • மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.

    போரூர்:

    சமையலுக்கு தினமும் பயன்படுத்தப்படும் பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்கப்படுகிறது, வெளி மார்க்கெட்டில் உள்ள கடை களில் ஒரு கிலோ பூண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உதிரி பூண்டு ஒரு கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது.

    மருத்துவ குணம் கொண்ட பூண்டு இல்லாமல் ரசம் உள்பட எந்தவொரு சமையலும் செய்ய முடியாது. உற்பத்தியாளர்களிடம் இருந்து பூண்டுவை அதிகளவில் கொள்முதல் செய்து பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பூண்டுவின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.50-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 10 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பூண்டு உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.

    மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், சின்ன வெங்காயம் மற்றும் பச்சை காய்கறிகளான பீன்ஸ், அவரைக்காய், உஜாலா கத்தரிக்காய் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.22-க்கும், சின்ன வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.25-க்கும், உஜாலா கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.15-க்கும், விற்கப்படுகிறது. சீசன் முடிந்து வரத்து குறைந்துள்ளதால் ஊட்டி கேரட் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.65-க்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

    • கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளைபயிர்கள் நாசமானது.
    • அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாப்பாடு அரிசி விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    மளிகை பொருட்கள் மீதான விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் குடும்பத்தினரின் 'பட்ஜெட்'டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறைய தொடங்கும். அப்படி ஒரு நிலைதான் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது.

    தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களின் வரத்துதான் இங்கு மளிகை பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளைபயிர்கள் நாசமானது. இதனால் அண்டை மாநிலங்களின் வரத்தை தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

    அதேவேளை அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பருப்பு வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது.

    அரிசியை பொறுத்தவரை 26 கிலோ கொண்ட ஒரு சிப்பம் சாப்பாடு அரிசி விலை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை அதிகரித்துள்ளது. பச்சரிசியும் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,600 ஆக அதிகரிக்கிறது. பாசுமதி அரிசி (30 கிலோ கொண்ட சிப்பம்) ரூ.3,200-ல் இருந்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோ சாப்பாடு அரிசியின் விலை ரூ.8 வரை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    • விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3350 கோடி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • அனைத்து நகரப் பகுதிகள், கிராமப்புறங்களில் மது பிரியர்கள் மதுபானங்களின் விலையை கேட்டு ‘ஷாக்’ ஆனார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தி உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசின் வருவாய் ஆதாரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த ஆண்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட பிறகு தற்போது மீண்டும் விலையை உயர்த்தி உள்ளது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களின் விலையும் ரூ.10 முதல் ரூ.80 வரை அதிகரித்துள்ளது.

    சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் விலை குறைவாகவும், பிரீமியம் வகை மதுபானங்கள் விலை அதிக அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10-ம், அரை பாட்டிலுக்கு ரூ.20-ம், முழு பாட்டிலுக்கு ரூ.40-ம் அதிகரித்துள்ளன.

    பிரீமியம் வகை மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.20-ம், அரைபாட்டிலுக்கு ரூ.40-ம், முழு பாட்டிலுக்கு ரூ.80-ம், பீர் வகைகளுக்கு ரூ.10-ம் கூடியுள்ளது.

    மதுபானங்களின் அதிக பட்ச சில்லறை விலை 80 ரூபாய் வரை கூடியதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3350 கோடி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குவாட்டர் பாட்டில் சாதாரண, நடுத்தர வகை மதுபானங்கள் முன்பு ரூ.130, ரூ.160-க்கு கிடைத்தது. அவை தற்போது ரூ.170 ஆக கூடியுள்ளது.

    பிரீமியம் வகை குவாட்டர் பாட்டில் முன்பு ரூ.180, ரூ.190, ரூ.200, ரூ.240 என்ற அளவில் விற்கப்பட் டது. இவற்றின் விலை தற்போது ரூ.20 உயர்ந்துள்ளது.

    மெக்டவல் விஸ்கி, மெக்டவல் பிராந்தி ரூ.200-க்கு இன்று விற்கப்பட்டது. வி.எஸ்.ஒ.பி.எக்ஸ்டிரா கோல்டு பிராந்தி ரூ.220, ராயல் சேலஞ்ச் விஸ்கி, சிக்னேச்சர் பிரீமியம் விஸ்கி குவாட்டர் ரூ.240-ல் இருந்து ரூ.260 ஆக உயர்ந்தது.

    ஓல்டு காஸ்ரம் கோல்டன், கிரேப் ஆர்டினரி பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி ஆகியவை குவாட் டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. டைமண்ட் பிராந்தி, விஸ்கி, ரம், சாபில் சூப்பர் ஸ்டார் பிராந்தி ஆகியவை குவாட்டர் ரூ.140 ஆக உயர்ந்தது. எம்.ஜி.எம் மீடியம் ஓட்கா, எம்.ஜி.எம். ஒயிட் மீடியம் ரம், வி.எஸ்.ஓ.பி. பிராந்தி குவாட் டர் ரூ.170-க்கு விற்கப்பட் டது.

    ஆபிசர்ஸ் சாய்ஸ், டைநைட் பிராந்தி ரூ.170, எம்.சி. ஓல்டு காஸ்க் ரம் ரூ.200, எம்.சி வின்டேஜ் கோல்டு பிளன்டட் மால்ட் விஸ்கி ரூ.230, செஞ்சூரியன் பிரெஞ்ச் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி ரூ.250 ஆக உயர்ந்து உள்ளது.

    பிரிஹான்ஸ் நெப்போலியன் பிராந்தி ரூ.210, பிரிஹான்ஸ் பிரீமி யம் விஸ்கி ரூ.200, பவர் ஆப்பிள் ஓட்கா, பவர் ஆரஞ்சு ஓட்கா ஆகியவை ரூ.170 ஆக உயர்ந்தது.

    ஓல்டு மங்க் டீலக்ஸ் ரம், கோல்டன் ஈகிள் ஆர்டினரி பிராந்தி, ஓரியன் பிராந்தி ஆகியவை குவாட்டர் ரூ.140, மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி குவாட்டர் ரூ.250, அரை பாட்டில் ரூ.500 ஆக கூடியது.

    கூலி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மதுபானங்கள் குவாட்டர் பாட்டில்கள் ரூ.140 ஆகவும், அரைபாட்டில் ரூ.280 ஆகவும் உயர்ந்தன. இனிமேல் சாதாரண வகை குவாட்டர் சரக்கு அடிக்க வேண்டுமா னால் குறைந்த பட்சம் ரூ.200 தேவைப்படும். தண்ணீர் பாட்டில், கிளாஸ், சினாக்ஸ் என ரூ.250 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

    பிரீமியம் வகையான சரக்குகளை சாப்பிடுபவர்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.350 வரை செலவிட வேண்டும். மதுபானங்கள் விலை இன்று முதல் அமலுக்கு வந்ததால் மது பிரியர்கள் முனுமுனுத்து கொண்டே சரக்கு வாங்கி குடித்தனர். "குடிகாரர்கள் தலையில் தான் கடைசியில் கை வைக்கும்" என்று புலம்பிக் கொண்டே சரக்கு வாங்கியதை காண முடிந்தது.

    சென்னை உள்ளிட்ட அனைத்து நகரப் பகுதிகள், கிராமப்புறங்களில் மது பிரியர்கள் மதுபானங்களின் விலையை கேட்டு 'ஷாக்' ஆனார்கள். ஆனாலும் கடைகளில் கூட்டம் குறையவில்லை. கடைகள் இன்று திறந்ததும் சரக்கு வாங்குவதற்கு காத்து நின்றனர்.

    கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் வேதனையுடன் புலம்பலை காண முடிந்தது.

    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.
    • இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆானலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபாஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள். சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை இன்னும் 350 ருபாயாக நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு.
    • 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    இந்நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறித்துள்ளது.

    ×